செல்வத்தை வழங்கி சிறப்பான வாழ்வு தரும் வரலட்சுமி விரதம்

மகாலட்சுமி விரதம் மேற்கொண்டால் கிடைக்கும் பலன்கள்

சகல செளபாக்கியத்தையும் தரும் வரலட்சுமி பூஜை செய்ய ஏற்ற நாள் ஆவணி மாத பெளர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை. ஏனெனில் அன்றுதான் மகாலட்சுமி அவதரித்த நன்னாளாகவும் கூறப்படுகிது. புராண கதைகளின்படி தேவர் உலகின் சித்ர நேமி என்ற கணதேதை, கரசந்திரிகா போன்ற பல பெண்கள் கடைபிடித்த வரலட்சுமி விரத்தை நாம் கடைபிடித்தாள் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பெண்கள் தங்கள் கணவன் ஆயுள் நீடிக்கவும், குடும்பத்தின் செல்வ செழிப்பு உயரவும், சுபிட்சம் பெருகவும் வேண்டி மகாலட்சுமியை தங்கள் வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்வதே வரலட்சுமி விரதத்தின் முக்கிய நோக்கமாகும்.

பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய மகா லட்சுமி தேவியை நினைத்தும், மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

Comments (0)
Add Comment