தமிழ் நாட்காட்டியில் ஐந்தாவது மாதமாக வருவது ஆடி மாதம். இது தமிழ் சந்திர மாதம் என்றும் குறிப்பிடப்படுகிறது. சூரிய பகவான் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் பயணிக்க துவங்கம் மாதம் ஆவணி மாதமாகும். முழு முதற் கடவுளான விநாயகர், திருமாலின் மிக சிறப்பான அவதாரங்களான கண்ணன், வாமனர் அவதாரங்கள் அவதரித்தது இந்த ஆவணி என்பதால் இதை அற்புதங்கள் நிறைந்த மாதம் என போற்றுகிறார்கள்.
ஆவணி மாதமானது சிங்க மாதம் என்றும், மாதங்களின் அரசன் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. கேரளாவில் ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் தான் விநாயகர் சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஓணம், ஆவணி மூலம், ஆவணி அவிட்டம், வரலட்சுமி விரதம் , ஆவணி ஞாயிறு, புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி போன்ற அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் வருகின்றன.