மக்கள் தொகை கணக்கெடுப்பு சென்சஸ் இரவு பகலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரோடு வீரப்பன் சத்திரம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருபவர் சுககேஸ்வரி. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு 7.30 மணி அளவில் வீதி வீதியாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி செய்து செய்து கொண்டிருந்தார். பள்ளியில் காலையில் ஆசிரியை வேலை பார்த்துவிட்டு மாலை நேரத்தில் கணக்கெடுப்பு பணியை இவர்கள் பார்த்து வருகிறார்கள். இவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.