Take a fresh look at your lifestyle.

குடும்பம், வீரத்தை மையமாகக் கொண்ட படத்தில் கார்த்தி!

25

‘சிங்கம் 2’ மற்றும் ‘சர்தார்’ போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கிய ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ (Prince Pictures) நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா ஆகியோரை இணைத்து பிரம்மாண்டமான குடும்பத் திரைப்படத்தை உருவாக்குதை பெருமையுடன் அறிவித்துள்ளது.

குடும்பம், உணர்வுகள் மற்றும் வீரத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான திரைப்படப் பயணம் தொடங்குகிறது.

குடும்ப விழுமியங்கள், மனதிற்கு நெருக்கமான பொழுதுபோக்கு மற்றும் ஊக்கமளிக்கும் வீரம் ஆகியவற்றை திரையில் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய படத்தின் மூலம், நடிகர் கார்த்தியும் இயக்குநர் மோகன் ராஜாவும் முதன்முறையாக இணைகிறார்கள். இந்த கூட்டணி மூலம் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் மீண்டும் ஒரு தரமான படைப்பை தயாரிக்க முன்வந்துள்ளது.

‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வேலாயுதம்’ மற்றும் ‘தனி ஒருவன்’ போன்ற படங்களுக்காக புகழ்பெற்ற இயக்குநர் மோகன் ராஜா, இந்த அறிவிப்பின் மூலம் திரையுலகில் தனது 25-ஆவது ஆண்டை கொண்டாடுகிறார். ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இவரது இந்த அறிவிப்பு, அவரது பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மேலும், கார்த்தியுடன் அவர் இணையும் செய்தி வெளியானதில் இருந்தே இந்தப் படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.